அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன. இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் எழு நபர்களைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்; அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள்.
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள்; அவர் "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி (மறுத்து) விட்டார்.
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தனக்காகவே நேசித்துக் கொள்ளும் தனது அடியார்களை அல்லாஹ் நேசிப்பதிலும், மேற்கூறப்பட்டதைவிட மிக உயரிய அருட்கொடைகளை வழங்குவதிலும் ஆச்சரியம் எதுமில்லை. அந்த அருட்கொடைதான் அவனது அன்பாகும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைக் காண்போம்.
துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது! "அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.
முஅத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்.'' (ஸன்னனுத் திர்மிதி)
அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: "யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? இதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்; அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள்.
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள்; அவர் "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி (மறுத்து) விட்டார்.
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தனக்காகவே நேசித்துக் கொள்ளும் தனது அடியார்களை அல்லாஹ் நேசிப்பதிலும், மேற்கூறப்பட்டதைவிட மிக உயரிய அருட்கொடைகளை வழங்குவதிலும் ஆச்சரியம் எதுமில்லை. அந்த அருட்கொடைதான் அவனது அன்பாகும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைக் காண்போம்.
துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது! "அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.
முஅத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்.'' (ஸன்னனுத் திர்மிதி)
அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: "யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? இதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)