முஸ்லிம் பெண்மணி
ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் அவணுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.
இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும் தனித் தன்மையான தோற்ற அமப்பையும் அமத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய "ஹிஜாப்' பர்தா என்று சொல்லப்படும் அடையாகும்.
தனது மனைவியின் நடத்தை பற்றி அல்லாஹ்விடம் விசாரிக்கப்படும் கணவர், அவளது வெளித்தோற்றங்களுக்கு மட்டுமல்லாது அவளது வணக்க வழிபாடுகளுக்கும் பொறுப்பாளி ஆவார். மனைவி அதில் குறை செய்து அலட்சியத்துடன் வரம்பு மீறியிருந்தால் அதுகுறித்தும் விசாரிக்கப்படுவார். மேலும் அவள் தனது கடமைகளை நிறைவேற்றிய விதம் குறித்தும் அவளின் குணங்கள், பழக்க வழக்கங்கள் பற்றியும் விசாரிக்கப்படுவார். இவ்விஷயங்களில் எந்த ஒன்றிலும் அவளிடம் குறைவு ஏற்பட்டால் அது கணவனின் ஆண்மைக்கு பாதகமாகவும், அவனது இஸ்லாமியத் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அல்லாஹ் அருளிய நிர்வகிக்கும் தகுதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமயும்.
இதற்குக் காரணம் என்னவெனில் இஸ்லாம் பெண்ணை அவணிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளது. பெரும்பாலான மனைவி கணவனின் வழியை அடியொற்றி நடப்பவளாகத்தான் இருக்கிறாள். அவன் அவளைத் தன்னுடன் சுவனத்திற்கு அழத்துச் செல்வான் அல்லது நரகிற்கு இழுத்துச் செல்வான். அதனால்தான் முஃமின்களுக்கு அல்லாஹ் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுகிறான். இது பற்றிய அல்லாஹ்வின் கட்டளையை ஆய்வு செய்தால் இதயங்கள் நடுங்கிவிடும். ஆனால் பலர் தங்களது மனைவி, மக்கள் விஷயத்தில் மிகுந்த அலட்சியத்துடன் இருக்கிறார்கள். அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை.