இல்லறக் கடமைகள்
குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன? என்பதை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில வழிமுறைகளைக் காண்போம்.
சிறு சிறு உதவிகளைச் செய்தல்கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும்அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்றுகேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரீ 5363
ஊட்டி விடுதல்சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.
''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரீ 1296, முஸ்லிம் 3076
கணவன், மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிடும் போது நபி (ஸல்) அவர்கள், முக்கியமான ஐந்து விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கும் அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைபயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும்'' ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்கள்: அஹ்மத் (19162) அபூதாவூத் (1830)
1 உண்ணும் போது உணவளிப்பது
2. உடுத்தும் போது உடை அணிவிப்பது
3. (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காமல் இருப்பது
4. (கண்டிக்கும் போது) கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது
5. வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதுஇந்த முக்கியமான ஐந்து விஷயங்களைப் பின்பற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
@ This hadith collected from Saheehul Buhari.
Please send your feedback to [email protected]